கோவில் கொடிகம்பம் உடைப்பு! செந்தில் தொண்டமான் தலையீட்டால் தீர்வு!!

எல்ல கிறீன்லேண்ட் தோட்டத்தில் பாரம்பரியமாக மக்களால் 1931 ஆம் ஆண்டிலிருந்து வழிபாடு செய்யப்பட்டு வந்த மரத்தடி இந்து கோவில் கொடிக்கம்பம் வனவிலங்கு திணைக்களத்தினரால் உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்தை அடுத்து இவ்விடயம் தொடர்பில் அத்தோட்ட மக்களால் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

செந்தில் தொண்டமான் இது குறித்து பொலிஸ் அதிகாரி,அரச அதிகாரி மற்றும் இந்துக்கலாச்சார அமைச்சுடன் கலந்துரையாடி, செந்தில் தொண்டமான் தலையீட்டால் 1 மணித்தியாலத்திற்குள் மீண்டும் கோவில் கொடிக்கம்பம் நாட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles