சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவால் சபாநாயகருக்கு அனுப்பட்டுள்ள கடிதம் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

Related Articles

Latest Articles