சம்பள உயர்வு: வரலாற்று வெற்றி!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாயாக அதிகரித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி வரலாற்றில் பதியப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என ஆளுங்கட்சி உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான இரண்டாம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். இது தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். அதற்காக ஜனாதிபதி வரலாற்றில் பதியப்படுவதை எவராலும் தடுக்க முடியாது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை வரலாறு, பெரும் போராட்டத்துக்குரியது.1939 ஆம் ஆண்டு முல்லோயாத் தோட்டத்திலே தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்திற்கான பிள்ளையார் சுழி போடப்படுகின்றது.

அப்போது பதினாறு சதமாக இருந்த தோட்டத்த தொழிலாளர்களின் சம்பளத்தை மேலும் 10 வீதத்தால் உயர்த்தி தருமாறு கேட்டபோது அன்றைய ஆட்சியாளர்களினால் கோவிந்தன் என்ற தோட்டத் தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதனால் இந்த வரலாறு என்பது மிகவும் போராட்டமிக்க வரலாறாகும். தற்போது இந்த நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினரின் ஆட்சியே அமைக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது . இது ஒரு வரலாற்று வெற்றியாகும் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles