சாட்சி கூண்டில் ஏறிய சந்தேகநபர் தற்கொலை முயற்சி – திருமலை நீதிமன்றில் பரபரப்பு

நீதிமன்றில் சாட்சி கூண்டில் ஏறிய சந்தேக நபரொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பமொன்று இன்று (04) திருகோணமலை நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவர், திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சாட்சி கூண்டில் முற்படுத்தப்பட்டபோது நீதவானுக்கு முன்னால் தன்வசம் வைத்திருந்த பிக்ரேசரினால் கழுத்தை அறுப்பதற்கு முற்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல் துறையைச்சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத ஹரோயின் போதைப் பொளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை (04) திருகோணமலை நீதவான் நீதிமன்று 2 ல் முற்படுத்தப்பட்டபோது சாட்சி  கூண்டில் நின்ற நிலையிலையே தனது கைவசம் மறைத்து வைத்திருந்த பிக்ரேசரை பாவித்து கழுத்தை அறுத்து தற்கொலை முற்பட்டுள்ளார் எனவும் தெய்வாதினமாக உயிர் தப்பிய நிலையில் கழுத்தில் இரு காயங்களுடன் திருகோணமலை பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கடந்த 2021 ஜூன் மாதம் தனது மனைவியாரின் தந்தையையும் தன் குழந்தையையும் படு கொலை செய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எனவும் இவரின் குழந்தை மரணித்துப்போன நிலையில் இவர் வழக்கிலிருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் எனவும் தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற் கொண்டுவருகின்றனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles