சிங்கப்பூரில் ஓட்டல் அறையொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் விக்டோரியா வீதியில் உள்ள பிரபல விடுதியொன்றின் 13ஆவது மாடியில் அறையொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் பொலிசார் தெரவித்துள்ளனர்.
சிங்கப்பூர் Management University இல் உயர் கல்வியை பயின்றுவந்த Nishad Manilka De Fonseka என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று 16ஆம் திகதி பதிவாகியுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி குறித்த மாணவன் தங்கியிருந்த அறையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, குறித்த ஓட்டலில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பு : மன இறுக்கத்தில் உறவுகள் இருக்கும் போது அவர்களுடன் தொடர்ந்து பேசுவதும், மருத்துவர் ஆலோசனைகளைப் பெற உதவி செய்வதும் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரும் உதவியாக இருக்கும். இயற்கைக்கு முரணாக உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாக அமையாது.