‘சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள் – வதந்திகளை நம்பவேண்டாம்’ – ஜனாதிபதி

” தற்போதைய சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சார குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு ஏமாறாமல், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்று அதன் படி செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

COVID-19 அச்சுறுத்தல் உலகெங்கும் பரவிக்கொண்டிருந்த வேலையில், ஒரு பலமான தேசமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதனை தோற்கடித்து வெற்றிகண்டோம்.

தற்போது , COVID-19 மீண்டும் நம் நாட்டிற்குள் வந்துள்ளது. முன்னரை போலவே, எமது சுகாதார, பாதுகாப்பு மற்றும் பிற சேவை துறைகளை சேர்ந்தவர்கள் இந்த அச்சுறுத்தலில் இருந்து நம்மைப்பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

இந்த சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சார குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு ஏமாறாமல், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்று அதன் படி செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Related Articles

Latest Articles