“ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள ஒன்றிணைக்க முடியாது என்றார்கள், அதனை நாம் இன்று செய்து காட்டியுள்ளோம். பல வருடங்களாக கட்சி பக்கம் வராதவர்கள்கூட இன்று அழைப்பையேற்று வந்தார்கள்.
எனவே, அடுத்த நான்கு, ஐந்து வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீள கட்யெழுப்படும். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
மருதானை டார்லி வீதியிலுள்ள சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று கடமையேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
