தெஹ்ரானில் இருந்து உடன் வெளியேறுங்கள்!

ஈரான், தெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று என்று அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான மோதல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள அமெரிக்க துணை தூதரக கட்டடம் ஈரான் தாக்குதலில் சேதம் அடைந்தது. இருநாடுகளின் ராணுவமும் அதிரடி தாக்குதல்களை இரவிலும் அரங்கேற்றி வருவதால் யுத்தம் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை.
இந்நிலையில், தெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார்.

‘ மனித உயிர்களை இழப்பது என்ன ஒரு அவமானம். மிகவும் இலகுவாக சொல்ல வேண்டுமானால் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது.

அதை தான் நான் மீண்டும், மீண்டும் சொன்னேன். அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு உடனடியரக வெளியேறுங்கள்.” எனவும் டிரம்ப் கூறி உள்ளார்.

குறிப்பாக தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் தமது தாக்குதல்களை வேகப்படுத்தி இருக்கும் தருணத்தில் அவரின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles