தேயிலை உற்பத்தித் திறனுக்கான திறவுகோலை சிறு தோட்ட உரிமையாளர்களே வைத்துள்ளனர்

சீர் திருத்தத்திற்கான செயன்முறை: இலங்கையின் தேயிலைத் தொழிலில் உற்பத்தித் திறனுக்கான திறவுகோலை சிறு தோட்ட உரிமையாளர்களே வைத்திருக்கின்றனர்

கே.எல். குணரத்னதலைவர், இலங்கை தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்கள் கூட்டமைப்பு

சுமார் 5,00,000 தோட்டத் தொழிலாளர்களைக் கொண்ட சிறுதோட்டத் துறையின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் இலங்கையின் தேயிலைக்கும் உற்பத்தி நடவடிக்கைகளும் இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் தமது குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றனர். இந்த நல்ல காரணத்தினால் தான் நாங்கள் பெரும்பாலும் எமது தேயிலைத் தொழிலாளியை ‘முதுகெலும்பு’ என்று அழைக்கின்றோம்.

இலங்கையின் விளைச்சல் நிறைந்த நிலங்களில் 16% தேயிலைத் துறைக்கு சொந்தமானவை. இதில், தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்கள் மொத்தமாக 60மூ தேயிலை நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் என்பதுடன் ஒட்டுமொத்தமாக 70% தேயிலை உற்பத்தியை மேற்கொள்ளுகின்றன. தேயிலைக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி, நாடு முழுவதிலும் 20 பெர்ச்சிற்கும் 10 ஏக்கருக்கும் இடையிலான தேயிலை நிலங்கள் ‘சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்’ என்று கருதப்படுகிறது.

நான் ஒரு சிறுதோட்ட உரிமையாளர், எனது பயணம் 1977ஆம் ஆண்டில் 2 ஏக்கர் தேயிலை நிலத்துடன் எனது பயணத்தை ஆரம்பித்தேன். தற்போது இலங்கை சிறுதோட்ட தேயிலை உரிமையாளர் சம்மேளத்தின் தலைவராக தற்போது நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது மூன்று சிறுதோட்டங்களையும் நடத்திச் செல்கிறேன். கடந்த மூன்று தசாப்தங்களாக (அல்லது அதற்கு மேற்பட்ட) ஒரு சிறுதோட்டம் இயங்குவது எளிதான விடயமாக இருக்கவில்லை. உங்கள் தேயிலை தோட்டத்தின் நிலப்பரப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி சிறிதாக இருந்தாலும் சரி நிலம் நன்கு நிர்வகிக்கப்படுவதையும், தேயிலை சரியாக அறுவடை செய்யப்படுவதையும், இலங்கையின் தேயிலையின் தரம் உறுதிப்படுத்தப்படுத்தி நிச்சயப்படுத்திக் கொள்வது ஒவ்வொரு நாளும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய முக்கியமான சவாலான விடயமாகும்.

தற்போது, தேயிலைத் தொழில் மற்றும் தேயிலை நிறுவனங்கள், தொழிலாளர் சம்பளம், உற்பத்தித் திறன், உற்பத்தி மற்றும்; தரம் குறித்த கவலைகள் தொடர்பாக தற்போது மிக அதிகமாக பேசப்படுகிறது. ஆகவே, சிறந்த நன்மைகளை செம்மைப்படுத்துவதற்கும், ஒரு நிலையான வழியைக் கண்டுபிடிப்பதற்கும் உதவும் ஒரு தேயிலை சிறுதோட்ட உரிமையாளர் கண்ணோட்டத்திலிருந்து படிப்பினைகளை பகிர்ந்து கொள்வது முக்கியம் என நாங்கள் உணர்ந்தோம். இந்தத் துறையை நாங்கள் நிர்வகித்து வரும் விதத்தில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை தொழிற்சாலை ஒரு கூட்டாக உறுதி செய்வது மிக முக்கியமாகும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சம்பள பேச்சுவார்த்தைகள் நெருங்கி வருவதால், சபையில் உள்ள தொழிற்துறை சார்ந்தோர் சிறந்த வழிகளை சபையின் ஊடாக முன்னெடுக்கின்றனர். சீர்திருத்தப்பட்ட ஒரு உடன்படிக்கைக்கான அவசர தேவை இருப்பதாக தெரிகிறது. இது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை ஏற்படும் பெரும் போராட்டத்துடன் கூடிய சண்டையாக இருப்பது மிக துரதிர்ஷ்டமான விடயம் என்பதுடன் இதில் வெற்றிபெற்றவர்கள் யாருமில்லை. தோல்வியடைந்தவர்கள் மாத்திரமே மிகுதியாகின்றனர்.

சிறுதோட்ட உரிமையாளர்களிடமிருந்து பாடம்

நாங்கள் இங்கே எவ்வாறு செயற்படுகிறோம்: நாள் ஒன்றுக்கு தோட்டத் தொழிலாளியினால் பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கும் 30 ரூபா வீதம் வழங்கப்படுகிறது. சில கொழுந்து பறிக்கும் தொழிலாளி செழிப்பான நாளில் சராசரியாக 30 கிலோ வரை பறிக்கிறார். வானிலை மண் மற்றும் கொழுந்து பறிக்கும் முறைகள் அனைத்தும் நமக்கு சாதகமாக இருக்கும் போது அது அவருக்கு சிறந்த நாளாக அமைகின்றது. ஒவ்வொரு தேயிலைப் புதரிலும் உள்ள இலைகள் ஒவ்வொரு 7-10 நாட்களுக்கும் சுழற்சி முறையில் பறிக்கப்படுகின்றது. அதாவது ஒவ்வொரு புதரிலிருந்தும் இலைகள் மாதத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது பறிக்கப்படுகின்றன. ஒரு தேயிலை நிலப்பரப்பு சிறந்த பலனை வழங்க தேயிலை பறிப்பவர்களின் நிபுணத்துவத்தைவிட அதிகம் தேவைப்படுகிறது. தேயிலை கொழுந்து பறிப்பவர்களைத் தவிர, களையெடுத்தல், உரமிடுதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பை பராமரித்தல் போன்ற கைமுறை உழைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடும் பிற களப்பணியாளர்களும் எங்களிடம் உள்ளனர். அவர்களுக்கு தினசரி 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த களப் பணியாளர்கள் நாள் ஒன்றுக்கு 8 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒரு தோட்டத் தொழிலாளிக்கு சம்பளம் செலுத்தும் முறையானது நிலையான தினசரி சம்பள மாதிரியிலிருந்து வெகுதூரம் கொண்டு செல்லக்கூடியதாகும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு தோட்;டத் தொழிலாளியும் அவர்கள் பறிக்கும்; கொழுந்தில் கிலோ அளவிற்கே சம்பளம்; வழங்கப்படுகிறது. அதாவது உற்பத்தி திறன் உள்ளடக்கப்பட்ட சம்பள மாதிரியில் அவர்களுக்கு நாள் சம்பளம் வழங்கப்படுகிறது.

நேரடி தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகையில், தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளிப்படையான அடிப்படையைக் கொண்டு சம்பளம் வழங்கும் திறன் இருந்தால் அவர்களுக்கும் எமக்கும் இடையில் மனக் கசப்புக்களை தீர்ப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும். இதன்மூலம் எனக்கு என்னுடைய தேயிலை செய்கை நிலங்களை சிறப்பாக நிர்வகிக்கவும், அதிக விளைச்சலைக் கொடுக்கவும் உதவியுள்ளதுடன் இருந்தாலும், நான் ஆர்வமாக இருக்கவும் மற்ற வேலைகளில் ஈடுபடுவதற்கும்; இது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, தேசிய முன்பள்ளி மேம்பாபட்டு அறக்கட்டளையை அமைப்பதற்கான எனது ஆர்வத்தை தொடரவும் முடிந்ததுளூ இந்த அறக்கட்டளை தோட்ட சமூகங்களுக்குள் ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், சிறு தோட்டங்களில் பணிபுரியும் தேயிலைக் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர். செயல்திறன் மற்றும் திறமைகளை மேம்படுத்த வேண்டும் என்ற அவசியத்தால் உந்தப்பட்;டு கொழுந்து பறிப்பாளர்கள் ‘மாற்றத்தின் முகவர்கள்’ ஆக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக, சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் காலத்திற்கு ஏற்றவாறு உருவாகியிருந்தாலும், உற்பத்தி திறனுக்கும் முன்னுரிமை அளிக்காத அல்லது போதுமான வெகுமதி அளிக்காத ஒரு அடிப்படை ஊதிய முறையைத் தொடருமாறு கட்டாயப்படுத்துவதன் மூலம் நமது தொழில்துறையில் எஞ்சியுள்ள பகுதிகள் முன்னேற்றத்திலிருந்து பின்தங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

எனவே RPCக்கள் ஒரு நிலையான முறைமையின் கீழ் நடவடிக்கைகளைத் தொடர முடியும் என்பதும் அவசியமாகும். RPC துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி முழுத் தொழிற்துறையினதும் மிக உயர்ந்த தரத்திற்கும், புத்தாக்கத்திற்கான அதன் திறனுக்கும் பெரும் ஆபத்துக்களை உருவாக்கும். இந்த இக்கட்டான நிலைக்கு முதல் மற்றும் மிக முக்கியமான தீர்வு குறித்து அனைத்து தரப்பினருக்கும் தெளிவாகத் தெரிகிறது. சம்பள மாதிரி திருத்தப்பட வேண்டும். தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்களாகிய எங்கள் அனுபவம் இந்த உண்மைக்கு தெளிவான சான்றாகும், மேலும் அதை சாதாரணமாக புறக்கணிக்கக் கூடாது. நாம் அனைவரும் எமது தேயிலையை ஆதரிப்பவர்கள், எமது தொழிற்துறையின் ஒரு துறையை காயப்படுத்துவது இறுதியில் நம் அனைவரையும் பாதிக்கும். ஒரு முன்னுதாரண மாற்றம் அவசியம், மேலும் இது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் விதத்தில் நீண்டகால தாமதமான புதுப்பித்தலுடன் மாத்திரமே ஆரம்பிக்க முடியும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles