” முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க நாம் தயாரில்லை. தேர்தலைபெறும்வரை எமது போராட்டம் தொடரும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.
அத்துடன், கண்ணீர் புகை குண்டு தாக்குதலுக்கு தமது அணி அஞ்சவில்லை எனவும், இலக்கை அடையும்வரை போராட்டம் தொடரும் எனவும் சஜித் சூளுரைத்தார்.