நாட்டில் மேலும் ஆயிரத்து 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 26 ஆம் திகதி 952 பேருக்கும், 27 ஆம் திகதி 1,096 பேருக்கும், 28 ஆம் திகதி 1,451 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில் இன்று 3ஆவது நாளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, கொரோனாவிலிருந்து 95 ஆயிரத்து 445 பேர் குணமடைந்துள்ளனர். 641 பேர் உயிரிழந்துள்ளனர். 8 ஆயிரத்து 847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.