T20 World Cup தொடரின் 31வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில்கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடிய யுவராஜ் சம்ரா, 65 பந்துகளில் 110 ஓட்டங்களை குவித்து அணியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார்.
அவரது சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றது.
174 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி கட்டுப்பாட்டுடனும் கணிக்கப்பட்ட தாக்கத்துடனும் ஆடியது. வெறும் 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 176 ஓட்டங்களை எட்டிய அவர்கள், 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில், இப்பிரிவில் இடம்பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் அணி அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.










