நீதிகோரி நடைபெறும் அம்பிகையின் போராட்டத்துக்கு கமலும் ஆதரவு!

இலங்கையை கண்டித்து அம்பிகை செல்வகுமார் பிரித்தானியாவில் ஆரம்பித்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் ஆதரவளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ருவிட்டரில் வெளியிட்ட பதிவில், ”இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பெப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்.சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஈழத்தமிழ் பெண் அம்பிகை செல்வகுமார் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம 17ஆவது நாளாக தொடர்கின்றது.

Related Articles

Latest Articles