இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்தும் இலங்கை மின்சார சபையின் நுவரெலியா கிளை ஊழியர்கள் இன்று புதன் கிழமை (07) மதிய உணவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
நுவரெலியா மின்சார சபை அலுவலகத்துக்கு முன்பாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய வளங்கள் விற்கப்படுவதை அரசு உடன் நிறுத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
நானுஓயா நிருபர்