ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கமும் அதன் தோழமைக்கட்சிகளும் பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கவுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
பட்ஜட்டுக்கு ஆதரவாக 151 பேரும், எதிராக பேரும் 54 வாக்களித்தனர்.
2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் கடந்த 17 ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இரண்டாம்வாசிப்புமீதான விவாதம் நடத்தப்பட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்டையுடன் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் ஆரம்பமானது. இந்நிலையிலேயே பாதீடுமீது இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.