ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (10.12.2020) மாலை நடைபெறவுள்ளது.
அரசாங்கமும் அதன் தோழமைக்கட்சிகளும் பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கவுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கவுள்ளன.
2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் கடந்த 17 ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இரண்டாம்வாசிப்புமீதான விவாதம் நடத்தப்பட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்டையுடன் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் ஆரம்பமானது. இந்நிலையிலேயே பாதீடுமீது இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
சிற்சில திருத்தங்கள் சகிதமே பாதீடு நிறைவேற்றப்படவுள்ளது.
பாதீட்டு கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும். அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும்.