பதில் பொலிஸ்மா அதிபரின் நியமனத்துக்கு பேராயர் எதிர்ப்பு!

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றார் – என்று  கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நியமனம் அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும். பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, 2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளது அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles