பதுளை மாவட்டத்தில் நேற்றும் 181 பேருக்கு கொரோனா தொற்று

பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்றும் 181 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் பதுளை மாவட்டத்தில் இதுவரை 841 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles