பதுளை மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு இன்று கொரோனா

பதுளை மாவாட்டத்தில்  மேலும் 42 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள், பிந்துனுவேவ மற்றும் ககாகொள்லை கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு இன்று பிற்பகல் அனுப்பட்டுள்ளனர் என்று பதுளை மாவாட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் சங்க பிரதானி சுப்ரமணியம் சுதர்சன் தெரிவித்தார்.

பதுளை பொது சுகாதாரப் பிரிவில் 09 பேர் , ஹாலி எல பொது சுகாதாரப்பிரிவில் 12 பேர் , ஹல்துமுள்ள சுகாதாரப்பிரிவில் 14பேர் , வெலிமடை சுகாதாரப்பிரிவில் இரண்டுபேர், மகியங்கனை சுகாதாரப்பிரிவில் மூன்றுபேர், பசறை சுகாதாரப்பிரிவில் இரண்டுபேர் என்ற வகையில் 42 பேர் கோவிட் 19 தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

கடந்த 30 ந் திகதி மாலை மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர். பரிசோதனை அறிக்கை இன்று   வெளியான போதே 42 பேர் தொற்றாளார்களாக இனங்காணப்பட்டிருந்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles