பதுளையில் 100 கோவில்களுக்கு நிதியுதவி

பதுளை மாவட்டத்தில் புனரமைக்கபட்ட 100 கோவில்களுக்கு செந்தில் தொண்டமான் நிதி வழங்கியுள்ளார்.

நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப்பணிகள் தாமதமான நிலையில் இருந்த கோவில்களை தெரிவு செய்து அந்த கோவில்களின் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்காக நிதி வழங்கியுள்ளார்.

தொட்டலாகலை, சேர்வுட், நீட்வுட் 40 ஏக்கர் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து கோவில் கட்டுமானப்பணிக்கான நிதியை வழங்கி வைத்தார்.

Related Articles

Latest Articles