பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – பொதுமக்களின் யோசனைகளை பெறும் காலம் மே 31 வரை நீடிப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான காலம், மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பிலான யோசனைகளை, அனுப்புமாறும் பொதுமக்களையும் சிவில் அமைப்புக்களையும் கோருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனைகள் மற்றும் கருத்துக்களை கவனத்தில் கொண்டு புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்க்பபட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles