‘பயணத்தடைக்கு மத்தியில் பயணித்த ஆட்டோ விபத்து – இருவருக்கு காயம்’

புஸல்லாவை, மெல்போர்ட் தோட்டத்தில் இன்று (30) முற்பகல் ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நாட்டில் தற்போது பயணத்தடை அமுலில் உள்ள நிலையில், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு நடமாடும் வணிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மெல்போர்ட் தோட்டப்பகுதியில் வாழும் மக்களுக்கு பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்வதற்குச்சென்ற ஆட்டோவே இவ்வாறு, வீதியை விட்டுவிலகி – வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநரும், அதில் பயணித்த ஒருவருக்கும் சிறு அளவியான காயம் ஏற்பட்டுள்ளது.

படங்கள் – மெல்போர்ட் ஶ்ரீ.
www.kuruvi.lk

Related Articles

Latest Articles