ஐக்கிய மக்கள் சக்தி உட்பட இதர கட்சிகளுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஆயிரத்து 137 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின், கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2018 இல் நடைபெற்ற உள்ளாட்சிசபைத் தேர்தலில், 340 உள்ளாட்சிமன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவான, உறுப்பினர்களின் உறுப்புரிமையே இவ்வாறு இரத்து செய்யப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் குறித்த உறுப்பினர்கள். வேறு கட்சிக்கு ஆதரவளித்துள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன், இவ்வருட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இவர்கள் ஏற்கனவே ஏனைய கட்சிகளின் ஊடாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்தே, அவர்களது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 300 பேர் கொண்ட குழு மன்னிப்பு கேட்க அவகாசம் கேட்ட போதிலும், கட்சியின் செயற்குழு அதை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீக்க முடிவு செய்தது.
உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில், எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 1137 புதிய உறுப்பினர்களை கட்சி நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










