ஆக்லாந்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ரி – 20 போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ரி 20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. 39 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ஜேக்கப் டபி இதில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணி தலைவர் சதாப் கான் 42 ஓட்டங்களையும், பஹீம் அஷ்ரப் 18 பந்தில் 31 ஓட்டங்களையும் அடிக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் பெற்றது. ஜேக்கப் டபி 4 ஓவரில் 33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். குக்கெலின் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 154 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க துடுப்பாட்ட வீரர் டிம் செய்ஃபெர்ட் 57 ஓட்டங்கள் விளாசினார்.
மார்க் சாப்மேன் 20 பந்தில் 34 ஓட்டங்களைப் பெறஅடிக்க நியூசிலாந்து 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.