‘பிரதமரை பதவி நீக்க ஜனாதிபதிக்கு பாராளுமன்ற அனுமதி அவசியம்’

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு – தனது இஷடத்துக்கேற்ப பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை, அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்காமல் இருப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை இறுதிப்படுத்தும் நோக்கில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (03) சர்வ கட்சி தலைவர்கள் கூட்டம், பிரதமரின் செயலகத்தில் நடைபெற்றது.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், 43 ஆம் படையணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர், தனக்கு தேவையான நேரத்தில் பிரதமரை பதவி நீக்கம் செய்யலாம் என்ற ஏற்பாடு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

எனினும், உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் அந்த ஏற்பாடு – சரத்து உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

’20’ இல் இருந்த அந்த ஏற்பாடு ’21’ இலும் தொடர வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மாறாக பிரதமரை பதவி நீக்கம் செய்யும் யோசனையை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கலாம். அந்த யோசனைக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இருந்தால் பிரதமரை பதவி நீக்கலாம். அதாவது, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன்தான் பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒத்த நடவடிக்கையாக இது கருதப்படுகின்றது.

அடுத்ததாக ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை, அவர் பாதுகாப்பு அமைச்சு பதவியை மட்டும் வகிக்கலாம். அடுத்து வரும் ஜனாதிபதிக்கு அந்த ஏற்பாடு பொருந்தாது, ஜனாதிபதி பதவியை வகிப்பவர் அமைச்சு பதவிகளை வகிக்க முடியாது என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

அதேவேளை, இரட்டை குடியுரிமை தடைக்கு எதிர்ப்புகள் வலுக்கவில்லை. இதனால் அந்த ஏற்பாடும் திருத்தமின்றி 21 இல் உள்வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று – இறுதிப்படுத்தப்பட்டு, அச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles