புதிய வகை கொரோனாவால் நாடு மீண்டும் முடக்கப்படுமா? நாளை இறுதி முடிவு!

உருமாறிய புதிய கொரோனா வைரஸின் அதிதீவிர பரவலுக்கு மத்தியில் நாடு தழுவிய முடக்க நிலையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்ற போதிலும் நாளையதினம் கொரோனா தடுப்பு பற்றிய தேசிய செயற்பாட்டு நிலையம் சந்திக்கும் போது இது குறித்து ஆராயப்படும் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘நாடுதழுவிய முடக்கநிலையைக் கொண்டுவருவது தொடர்பாக எந்தவிதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் நாளையதினம் கூடும் போது இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படும்’என பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சுகாதார திணைக்களத்தின் தொற்றுநோயியல் பிரிவு தற்போதைய நிலைமையை ஆராய்ந்துவருவதாவும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பாக தீர்மானிக்கும் எனவும் பொதுச் சுகாதார சேவைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 14ம் திகதி கணக்கெடுப்பில் இலங்கையில் 33,472 கொரோனா தொற்றாளர்கள் மொத்தமாக இனங்காணப்பட்டிருந்தனர். அது முதல் இன்றையதினம் பெப்ரவரி 14ம் வரையான இரண்டுமாத காலப்பகுதியில் பதிவான மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 40,000 ஆயிரத்தால் அதிகரித்து இதுவரை இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 74, 852 ஆக அதிகரித்திருக்கின்றது.

இலங்கையில் ஒருபகுதி பாடசாலைகளை நாளை பெப்ரவரி 15ம் திகதிமுதல் மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தபோதும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிவருவதன் காரணமாக அந்த தீர்மானம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் Covid-19 வைரஸின் புதிய வகை இலங்கையிலும் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles