பொகவந்தலாவையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எழுவர் கைது!

பொகவந்தலாவையில் இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எழுவரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்படி பொகவந்தலாவை , கொட்டயாகல தோட்டத்திலுள்ள தேயிலை மலையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் நேற்று மாலையும், லொய்னோன் தோட்டத்தில் இவ்வாறான செயலில் ஈடுபட்ட மூவர் இன்று அதிகாலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் மீடக்கப்பட்டுள்ளன. கைதானவர்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ நிருபர் – எஸ். சதீஸ்

Related Articles

Latest Articles