பொம்மையொன்றை புடவையில் சுற்றி அதனை குழந்தைபோல் அரவணைத்து, கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் யாசகம் பெற்றுவந்த பெண்ணொருவர் ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைக்கு பால்மா வாங்க வேண்டுமென தெரிவித்தே அவர், பயணிகளிடம் யாசகம் பெற்று வந்துள்ளார்.
ரயில்வே பாதுகாப்பு பிரிவினர், இந்தப் பெண்ணை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்ததுடன் , அவர் வைத்திருந்த பொம்மையை உடைத்தெறிந்துள்ளனர்.
