பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் – பனாமுர பகுதியில் பதற்றம்

இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட எம்பிலிப்பிட்டிய, பனாமுர பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து பிரதேச மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. இதனால் மேலதிக பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.

பனாமுர பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 38 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை, அடிப்படையாகக்கொண்டு நீதிகோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொது மக்கள், சுயாதீன விசாரணையை கோருகின்றனர்.

குடும்ப தகராறு தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் 38 வயதான குறித்த நபர் நேற்றிரவு 10 மணிக்கு கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை காலை 3.30 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டார் என உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரின் மரணத்துக்கு பொலிஸாரே காரணம் எனக் கோரி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ரயர்களும் கொளுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து தடையும் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனே, பொலிஸாரின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

இந்த குற்றச்சாட்டை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துள்ளார். சிறைக் கூண்டுக்குள் உள்ள கம்பியில் தொங்கி அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles