போதை மாத்திரை வியாபாரி பதுளையில் கைது!

போதை மாத்திரைகளுடன் பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய பதுளை வெவஸ்ஸ கிராமத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை கொண்டு வந்து பதுளை பகுதியில் விற்பனையில் ஈடுபடுவதாக பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய தேடுதலை மேற்கொண்ட போது சந்தேக நபரிடம் இருந்து 345 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர ஆகியோரின் ஆலோசனையின் பேரில் குற்ற புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரபோ சானக்க தலைமையில் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின்னர் சந்தேக நபரை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles