மலையக தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி விரைவில் பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மலையக தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று விரைவில் இடம்பெறவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பிய பின்னர் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.

மலையக தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மலையக பகுதிகளுக்கான அபிவிருத்திகள் மற்றும் உரிமைகள் சம்பந்தமாக இதன்போது பேசப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழக் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுகளை ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles