மல்லியப்பு தோட்ட கோயில் உடைப்பு – உண்டியல்கள் திருட்டு!

ஹட்டன்- மல்லியப்பு தோட்டத்தில் உள்ள கோவில் உடைக்கப்பட்டு, அங்கிருந்த இரண்டு உண்டியல்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த கோவிலுக்குள்நேற்று முன்தினம் (21) இரவு 10 மணியளவில் நுழைந்த சிலர், கோவிலிருந்த உண்டியலைகள் இரண்டை எடுத்துச் சென்று, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கோவில் நிர்வாகத்தால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருடர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles