மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த கைதி நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார் எனவும், அவரை தேடும் பணி தொடர்கின்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மஹர சிறைச்சாலையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.