மூத்த பத்திரிகையாளர் ஷண் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

சிரேஷ்ட பத்திரிகையாளர்   எஸ்.  சண்முகராஜாவின் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ  55 வருடங்கள் தொடர்ச்சியாக  ஊடகத்துறையில்  கால்பதித்த  சண்முகராஜா  சிலவாரங்கள்  சுகவீனமுற்றிருந்த நிலையில்  தனது 85 ஆவது வயதில்  யாழ்ப்பாணத்தில் காலமானார்.
1935 ஆம் ஆண்டு   யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் 1955  இலிருந்து கொழும்பை வசிப்பிடமாகவும்  கொண்ட ஷண் என்று எல்லோராலும்  அழைக்கப்படும் மூத்த பத்திரிகையாளர்   சண்முகராஜா கலை, இலக்கியம், சினிமாத்துறை, தமிழக அரசியல்,  என பல்வேறு பரிணாமங்களில்  தனது ஊடகப்பணியினை   ஆற்றிவந்திருந்தார்.
1940 களில்  தனது ஆரம்பக்கல்வியை  யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் ( அன்றைய காலகட்டத்தில்   சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டார்கள்)  அதற்கடுத்து யாழ். மத்திய கல்லூரியிலும்   பயின்ற  ஷண் 1964 ஆம் ஆண்டு முன்னாள்  தினகரன்  ஆசிரியர் வி.கே. பி. நாகனை  ஆசிரியராகக் கொண்டு  எம்.டி. குணசேனாவின் இன்டிபென்டன் நியூஸ்பேப்பர்ஸ்  லிமிடெட்டிலிருந்து வெளிவந்த  ‘‘ராதா’’ சஞ்சிகை  மூலம் பத்திரிகைத் துறைப் பயணத்தை ஆரம்பித்தார்.
1966 ஆம் ஆண்டு  அதே பத்திரிகை ஸ்பானத்திலிருந்து இலங்கையின் தமிழ்ப் பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகத்தை  பிரதம  ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த  தினபதி,  சிந்தாமணி, சூடாமணியிலும் பணியாற்றியவர்.  கடைசியாக  வீரகேசரியிலும்  பணியாற்றி ஓய்வு பெற்ற  போதிலும்   இறுதிக்காலம் வரை  இவரது  ஆக்கங்கள்  சுதந்திர ஊடகவியலாளராகப்  பணியாற்றுவதன் மூலம்  ஷண்  , சஞ்(ஷண்)ஜயன், அன்டர்ஷண் என்ற புனைப்பெயர்களில் வெளிவந்துகொண்டிருந்தது.ஷண்ணின் மறைவு தமிழ் ஊடகப்பரப்பில் நிச்சயம் ஒரு இடைவெளியை விட்டுச் சென்றுள்ளதை குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  14 ஆம் திகதி  வாழ்நாள்  நீண்டகாலம்  பத்திரிகைத்துறையில்  சேவைக்காக    இலங்கை பத்திரிகை   ஸ்தாபனமும் , இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும்    இணைந்து  நடத்திய   ஊடகவியலாளர்களை   கெளரவிக்கும் 10 ஆவது  வருட விருது வழங்கும் விழாவிலும்   தங்கப் பதக்கம்     வழங்கி  கெளரவிக்கப்பட்ட ஷண்  கலாபூஷணம் அரச விருது  வழங்கும் விழாவிலும் விருது வழங்கி  கெளரவிக்கப்பட்டார்.
தற்போதைய கொரோனா சூழ்நிலையால் அவரின் இறுதிக்கிரியைகளில் ஊடகவியலாளர்கள் நேரடியாக சென்று கலந்துகொள்ள முடியாத போதும் அவரின் நினைவஞ்சலி நிகழ்வை கொழும்பில் நடத்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஒழுங்குகளை செய்யவுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் ,தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கேட்டுள்ளது.
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles