மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு! வான்கதவுகள் திறப்பு!!

மலையகத்தில் பெய்துவரும் அடை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நேற்றிரவு (18) முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

எனவே, அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles