ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மக்கள் நம்பிக்கையை இழந்துவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சீவ எதிரிமான்ன மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கும், செய்கின்ற செயலுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இதனை மக்களும் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.
தமது பாரம்பரியக் கட்சிகளையெல்லாம் விட்டுவிட்டுதான் இந்த அரசாங்கத்துக்கு வடக்கு, கிழக்கும், மலையகம், தெற்கு என அனைத்து பகுதி மக்களும் ஆதரவு வழங்கினார்கள். எனினும், தற்போது அரசாங்கம்மீதான மக்கள் நம்பிக்கை குறைந்துவருவதை அவதானிக்க முடிகின்றது.
2024 ஆம் ஆண்டு தேர்தல் வருடாகும். 2015 ஆம் ஆண்டு பின்னடைவைச் சந்தித்து 2018 இல் மீண்டெழுந்ததுபோல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டெழும். அதற்கேற்ற வகையில் கட்சி கட்டியெழுப்படும்.” – என்றார்.










