“அரசியலில் இருந்து தான் ஒதுங்கிவிட்டதாக ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்துள்ளார்.” – என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, ரணில் நாடாளுமன்றம் வருவதற்காக தேசிய பட்டியல் எம்.பி. பதவியை துறப்பதற்கு நீங்கள் தயாரா என ரவி கருணாநாயக்கவிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
“ ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடாது என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும்.” -என்றார்.










