ரணில்மீது அநுர அரசு கை வைக்காது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்கும் என தான் நம்பவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இலஞ்ச, ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரணில் விக்கிரமசிங்க வரவழைக்கப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ரணில் விக்கிரமசிங்கவின் புண்ணியத்தால்தான் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். ரணில் இல்லையேல் அநுர இப்பதவிக்கு வந்திருக்கமாட்டார். எனவே, பிரச்சார மேடைகளில் கூறப்படுவதுபோல ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் நம்பவில்லை. என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்ப்போம்.” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles