வவுனியாவில் மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை என்பன 10 லட்சம் ரூபாவுக்கு ஏலம் போன சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா, மரக்காரம் பளை வீதி – கணேசபுரம் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் ஆலய அலங்கார திருவிழா உற்சவத்தின் 6வது நாள் திருவிழா நேற்று நடைபெற்றது.
இந்த திருவிழா பூஜைகளின் போது, இறைவனுக்கு படைக்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை ஆகியன ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன.
இவ்வாறு ஏலத்திற்கு விடப்பட்ட மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை ஆகியவற்றிற்கு கடும் போட்டி நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கடும் போட்டிக்கு மத்தியில், குறித்த பொருட்களை சபரிராஜன் என்ற மாணவன், ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலத்திற்கு எடுத்துள்ளார்.
கிராமப்புற ஆலயமொன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டமை அனைவரையும் ஆச்சரியத்திற்கு உட்படுத்தியுள்ளது.
இவ்வாறு ஏலத்தின் ஊடாக கிடைக்கப் பெற்ற பணம், ஆலயத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.










