வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு நீதி கிட்டுமா?

வட்டவளை, ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தமக்கு தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் ‘போனஸ்’ இன்னும் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

‘போனஸ்’ வழங்குவது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் கூறினர்.

அத்துடன், ‘போனஸ்’ கோரி போராட்டம் நடத்தினால் தொழிற்சாலை மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டனர்.

வட்டவளை, ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆடைத்தொழிற்சாலைக்குள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘போனஸ்’ வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே இப்போராட்டம் இடம்பெற்றது.

இந்நிலையில் திங்கள் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது. எனினும், இன்று உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles