வெலிமடை அம்பரகல தோட்டத்திலுள்ள ஆலயத்தின் குருக்களை, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன், மரண அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
குறித்த ஆலயத்துக்கு அண்மையில் சென்ற பெரும்பான்மை மூகத்தை சேர்ந்த பெண்ணொருவர், ஆலய விதிமுறைகளை மீறி வழிபாட்டு முறைகளை அவமதித்து செயற்பட்டதால் , ஆலய குருக்களுக்கும், பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஆலய குருக்கள் கடுமையாக தாக்கப்பட்டு , காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குருக்களுக்கு நீதி கோரி தோட்ட மக்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலய குருக்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானின், கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பட வேண்டும் என பொலிஸ் பொறுப்பு அதிகாரிக்கு , செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், சிங்கள,தமிழ் மக்களிடையே முறுகல் நிலை ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கவும், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது மேலதிக நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார் என செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.










