நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் இருந்துள்ளன.
இதில் ‘என் சாவுக்கு காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இதுவரையில் 40 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.