அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,
மாணவர்களுக்கான சீருடைத் தேவையில் 70 வீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 30 வீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.










