அப்புத்தளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அப்புத்தளை பிரதேச பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் எஸ்.சுதர்ஷன் தலைமையில், பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் ரோய் விஜயசூரிய அடங்கிய குழுவினரே பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அனைத்து பலசரக்கு கடைகளிலும், நுகர்வோர் பாவனைக்கு உகந்ததான
தரமான தேங்காயெண்ணெய் விநியோகிக்கப்படுகின்றதா என்பதை அறிவதற்காக தேங்காயெண்ணெய் மாதிரிகள் கடைகளில் பெறப்பட்டன.
அத்துடன், காலவதியான மற்றும் தரமற்ற பொருட்கள் இனங்காணப்பட்ட எட்டு கடைகளின் வியாபார நடவடிக்கைகளுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம். செல்வராஜா, நடராஜா மலர்வேந்தன்










