இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உடன்பாட்டை இவ்வாண்டுக்குள் எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இணையவழியில் (ZOOM) பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.