அரசில் இருந்து வெளியேறுவோம் – மொட்டு கட்சி எம்.பி. எச்சரிக்கை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாவிட்டால் அரசில் இருந்து வெளியேறுவது பற்றி சிந்திக்க நேரிடும் என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நேற்று தெரிவித்தார்.

” குடுகாரர்கள் மற்றும் தெரு சண்டியர்களுக்கு அஞ்சி ஒளியும் நபர்கள் நாங்கள் கிடையாது.

அத்துடன், எங்கள் வாக்குகளால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். அவர் ஜனாதிபதியான பின்னர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கொக்கரிக்க ஆரம்பித்துள்ளனர். அதிகமாக துள்ள வேண்டாம் என எச்சரிக்கின்றோம்.” எனவும் சனத் நிஷாந்த குறிப்பிட்டார்.

அதேவேளை , ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்காக உழைத்தவர்கள்தான் கட்சியின் மாவட்ட தலைவர்கள். அவர்களுக்கு உரிய இடமில்லையேல், அப்படியானதொரு அரசில் இருக்க வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles