ஆகஸ்ட் முதலாம் திகதியை சிறுத்தைகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு சஜித் கோரிக்கை

தேசிய சிறுத்தைகள் தினமாக ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒகஸ்ட் 2021 இல் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) முன்மொழியப்பட்டதன் பிரகாரம் ஒகஸ்ட் (01) இலங்கை சிறுத்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டதென்றும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், நாட்டில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விலங்கினங்களை பாதுகாக்கும் அதே வேளையில், சுற்றுச்சூழல் சுற்றுலா மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். ஒரு குறிப்பிட்ட நாளை தேசிய தினமாக பிரகடனப்படுத்தும் போது விசேட நடைமுறையொன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனால், இவ்விடயம் தொடர்பில் தாம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles