இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை டெல்மார் மேற்பிரிவு குளத்தில் சடலமொன்று மிதப்பதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சடலமொன்று மிதப்பதாக இன்று (03) புதன்கிழமை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த மிதக்கும் சடலம் பெண் ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் குளத்தில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் குளத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது அந்த நபரை எவராவது கொலை செய்து குளத்தில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.