ஊரடங்கு உள்ள ஊர்களில் கடைகளில் இரண்டு தினங்கள் திறக்க அனுமதி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள கொழும்பு, குருணாகல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் மருந்தகங்களை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள கடைகள் மற்றும் மருந்தகங்களை வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 08 மணி – இரவு 10 மணி வரை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

#Covid19 | #CoronaVirus | #LKA

Related Articles

Latest Articles