” எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிடம் ஒப்படைக்கவும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
” எதிர்க்கட்சி தலைவருக்குரிய பணியை சஜித் பிரேமதாச சரிவர நிறைவேற்றவில்லை. ஆனால் குமார வெல்கம சிறப்பாக செயற்படுகின்றார். எனவே, தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வெல்கமவிடம் ஒப்படைக்குமாறு நாம் எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – எனவும் அவர் கூறினார்.